tag:blogger.com,1999:blog-123035232024-02-28T02:39:07.526-08:00மன்மத ரகசியம்தமிழ் காமசூத்ரா - ஈகரை தமிழ் களஞ்சியம் www.eegarai.net - www.eegarai.comசிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-12303523.post-85568943148948737602008-09-20T10:30:00.000-07:002011-08-05T10:28:56.788-07:00ஈகரை தமிழ் களஞ்சியம்மன்மத ரகசியம் பற்றிய மேலும் தகவல்களை வலைத்தள நண்பர்களின் வசதிக்காக எனது கருத்துக்களம் பகுதிக்கு மாற்றம் செய்துள்ளேன்.<br />
<br />
மேலும் படிக்க <a href="http://eegarai.net/"><span class="Apple-style-span" style="color: #cc33cc;"><span class="Apple-style-span" style="font-size: x-large;"><span class="Apple-style-span" style="font-weight: bold;">ஈகரை தமிழ் களஞ்சியம்</span></span></span></a>சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-59998589991522233262008-08-28T11:53:00.000-07:002008-08-28T11:54:04.832-07:00ஆண் குறி-மூட நம்பிக்கைகள்உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள முடியாது.<br /><br />ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய். பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது.<br /><br />பொதுவாக பெண்ணின் நிர்வாணத்தைக் கண்ட உடனே ஆணின்குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவறான கருத்து. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்கலாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச்சைச் செயலில் சேர்ந்தது தான்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1132938839755842882005-11-25T09:12:00.000-08:002005-11-25T09:13:59.756-08:00செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண்டும்...? <br /><br />* கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும். <br /><br />* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும். <br /><br />* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும். <br /><br />* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும். <br /><br />* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும். <br /><br />* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது. <br /><br />* உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது. <br /><br />* கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும். <br /><br />* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம். <br /><br />* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது. <br /><br />* கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள். <br /><br />* பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1132938429323776472005-11-25T09:04:00.000-08:002008-08-28T13:00:46.824-07:00பாலியல் - பளிச் பதில்கள்இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்.... <br /><br /><strong>* </strong> ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா? <br /><br /> பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது. <br /><br /><strong>* </strong> தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்? <br /><br /> உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம். <br /><br /><strong>* </strong> குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா? <br /><br /> பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். <br /><br /><strong>* </strong> மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா? <br /><br /> நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம். <br /><br /> <strong>* </strong> கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா? <br /><br /> கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும். <br /><br /> <strong>* </strong> பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்? <br /><br /> ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும். <br /><br /> <strong>* </strong> திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்? <br /><br /> ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. <br /><br /><strong>* </strong> பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்? <br /><br /> பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம். <br /><br /><strong>*</strong> பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா? <br /><br /> சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம். <br /><br /><strong>* </strong> ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா? <br /><br /> சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124860060259813832005-08-23T22:02:00.000-07:002008-08-28T13:04:06.519-07:00செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்இப்போதெல்லாம் செக்ஸ் பிரச்சினையில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புதிது புதிதான சந்தேகங்களைத் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க வேண்டி மருத்துவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். <br /><br />ஆண்மைக்குறைவு, விந்து சுரக்காமை, விந்து வெளியேறமை, சிறிய ஆண்குறி, இப்படி அவர்களது பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முக்கியமானது தான், செக்சில் ஆர்வம் குறைந்து போவது.... இது வயது ஆக ஆகக் குறைந்து போவது இயற்கை தான். <br /><br />இருந்தாலும் ஒரு சிலருக்கு, வயதாகும் முன்பே செக்சில் ஆர்வம் குறைந்து போய், திருவிழா நாட்களிலும் பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்ட புத்தாடையாய், மனைவியைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தான் வாழ்க்கையில் அவர்களுக்கு புயல் வீச ஆரம்பிக்கிறது... <br /><br /><span style="font-weight:bold;">சரி. செக்ஸ் உணர்வை அதிகரித்துக் கொள்ள ஏதாவது உணவு வகை இருக்கிறதா?</span><br /><br />உடலுறவு வேட்கையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயம் முதலிடம் வகிக்கிறது. வெங்காயத்திலும் நாட்டு வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இதைத் தவறாமல் நாள்தோறும் உணவில் சேர்த்து வருவது நல்லது. இதன் காரணமாகத்தான் பெண் வாசனையே இன்றி இருக்க விரும்பும் ஆண்கள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதிலும், சமைக்காத பச்சை வெங்காயமாகச் சாப்பிடும் போது தான் இதன் முழுப்பலனையும் பெற முடியும். <br /><br />இன்னும் சிலர், நமது நாட்டில் பரவலாகக் காணப்படும் வெற்றிலை போடும் பழக்கத்தாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறுவார்கள். இது தவிர, நன்கு வெயிலில் காய்ந்த ஆட்டுக்கறியை எண்ணையில் வறுத்துச் சாப்பிட்டாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிலும் ஆண்மைத்தன்மை சுத்தமாகக் குறைந்து போனவர்களுக்கு இது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனுபவரிதியாக என்னவெனச் சரியாகத் தெரியவில்லை. <br /><br />மேலும்,. கடலில் காணப்படும் சிப்பி வகை (ஆய்ஸ்டர்) உணவு, ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேற்கூறிய உணவு வகைகள் பற்றி அவ்வளவு உறுதியான முடிவுகள் தெரியவில்லை என்றாலும்., கடைசியாகக் கூறிய, சிப்பி வகை உணவு விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124859702242896992005-08-23T22:01:00.000-07:002005-08-23T22:01:42.243-07:00உச்சக்கட்ட இன்பமும் பெண்குறி இறுக்கமும்பெண்களின் உச்சக்கட்டம் கருப்பையில் ஏற்படும் தாளகதியான ததைச்சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்கள் இவையெல்லாம் கலந்த ஒரு கலவையாகும். முதல்கட்ட இறுக்கங்கள் மிகத்தீவிரமானவை. <br />உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அடுத்தடுத்து இவை ஏற்படும் உச்சக்கட்டம் நீடிக்கிறது. போகப்போக காலதாமதம் தீவிரமில்லாத உச்சக்கட்டத்தில் மூன்று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத்தில் பத்து அல்லது பதினைந்து இறுக்கங்கள் ஏற்படுமாம். <br /><br />உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டுமே ஏற்படுகிற நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாறக முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124859626633362552005-08-23T21:57:00.000-07:002005-08-23T22:00:26.636-07:00ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...?ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்.... <br /><br />எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை... <br /><br />வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்.... <br /><br />வஞ்சக நோக்கம் உடையவள்... <br /><br />அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள் <br /><br />வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள் <br /><br />தூது செல்பவள் <br /><br />தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள் <br /><br />குலப் பெருமையை அறிந்திராதவள் <br /><br />மலடி <br /><br />கணவனிடமிருந்து விலகி வாழ்பவள் <br /><br />செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள் <br /><br />வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்... <br /><br />கட்டுப்பாடு இல்லாதவள் <br /><br />அசாதாரணக் குணம் உள்ளவள் <br /><br />தகுதியற்றவனை மணந்தவள் <br /><br />வயதான கணவனைக் கொண்டிருப்பவள் <br /><br />இளம் வயதில் கணவனை இழந்தவள் <br /><br />அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள் <br /><br />காம இச்சை அதிகம் கொண்டவள் <br /><br />ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள் <br /><br />கணவனை வெறுப்பவள்.... <br /><br />இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....* <br /><br />ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124859446082162262005-08-23T21:54:00.000-07:002005-08-23T21:57:26.083-07:00பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...?ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா... <br />தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்... <br /><br />பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன். <br /><br />விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன் <br /><br />ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன் <br /><br />பிற ஆணுக்காகத் தூது செல்பவன் <br /><br />அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன் <br /><br />உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன் <br /><br />அதிகத் துணிச்சல் உள்ளவன் <br /><br />ஒன்றக வளர்ந்தவன்... <br /><br />காம சாஸ்திரம் நன்கு கற்றவன் <br /><br />அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்.... <br /><br />இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன் <br /><br />மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்... <br /><br />புதுமாப்பிள்ளை <br /><br />முதலாளியாக இருப்பவன் <br /><br />தாராள மனப்பான்மை உள்ளவன் <br /><br />ரகசியத்தை அறிந்தவன் <br /><br />அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன் <br /><br />பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்....சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124859255146258512005-08-23T21:50:00.000-07:002005-08-23T21:54:15.146-07:00ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா? <br /><br />ஒழுக்கம் <br /><br />சந்தேகம் <br /><br />வயதான ஆணாக இருப்பது <br /><br />குழந்தைப் பாசம் <br /><br />உடல் நலக்குறைவு <br /><br />கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல் <br /><br />கணவனிடம் உள்ள மிகுதியான அன்பு <br /><br />அவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம் <br /><br />சமூக நிலை <br /><br />விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம் <br /><br />காதலனின் துணிவு <br /><br />கணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம் <br /><br />அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம் <br /><br />நல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன் <br /><br />காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை <br /><br />காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது <br /><br />உலக, பொது அறிவு இல்லாதவன் <br /><br />அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம் <br /><br />கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம் <br /><br />கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம் <br /><br />இப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124859032670289862005-08-23T21:47:00.000-07:002005-08-23T21:50:32.673-07:00ஆண், பெண் காமஇச்சை பற்றி கணிகபுத்திரர் கருத்து...*ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் பல வழிகளில் உண்டாகலாம் என்கிறது காமசூத்திரம். அவற்றில் காம இச்சையின் தன்மையைப் புலப்படுத்த சுமார் 10 காரணங்களையும் அது கூறுகிறது.<br />அவை.....<br /> <br />உடல் கவர்ச்சி <br />ஏக்கம் <br />தூக்கமின்மை <br />மனப்பற்று <br />உடல் மெலிதல் <br />வெறுப்பு <br />வெட்கமின்மை <br />குழப்பம் <br />மயக்கம் <br />உயிர் ஊசலாடுதல்.... <br /><br />ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் ஏற்பட்டால், அவனிடம் மேற்கூறிய இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கும். அதை வைத்துப் புரிந்து கொள்ளலாம் என்கிறது காமசூத்திரம். <br /><br />இது தவிர, ஒரு பெண்ணின் உடல் அமைப்பையும், உடலில் உள்ள சில குறிப்பிட்ட அடையாளங்களையும் கொண்டே சில விஷயங்களைப் புரிந்து கொள்ளாலாம் என்கிறது காமசூத்திரம். அவை என்ன....? <br /><br />விருப்பம் <br />கணவனிடம் காட்டும் பற்று <br />கற்பு <br /><br />காம இச்சையில் தீவிரமானவளாக இருப்பாள். அல்லது ஆசை குறைந்தவளாக இருப்பாள். ஆனால் வேறு காமநுல் வல்லுநர்கள், பெண்ணின் உடல் அமைப்பு, மற்றும் அடையாளங்களைக் கொண்டு சாpயாகத் தீர்மானிக்க முடியாது என்கின்றனர். வேறு எப்படித் தெரிந்து கொள்வதாம்? அந்தப் பெண்ணின் நடத்தையைக் கொண்டே தீர்மானிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. <br /><br />ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் அந்தந்தப் பருவத்தில் ஒரு வித இனக்கவர்ச்சி உண்டாவது இயற்கை தான். இதன் இயல்பைப் பற்றி கணிகபுத்திரர் என்ற காமசூத்திர வல்லுனர் என்ன கூறுகிறார் எனப் பார்க்கலாமா.... <br /><br />அழகான ஆடைகளை அணிந்து கவர்ச்சியான தோற்றத்துடன் இருக்கும் ஆணையே ஒரு பெண் விரும்புவாள். அதே போலத்தான் அழகான தோற்றத்ததையுடைய பெண்களிடமே ஆண்கள் மனதைப் பறிகொடுக்கிறார்கள். ஆண்களிடம் கொள்ளும் மோகத்தை பெண்கள் அவ்வளவு சாதாரணமாக வெளிக்காட்டுவதில்லை. மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம், பின்னால் என்ன நிகழுமோ என்ற அச்சம்தான் என்கிறார் கணிகர். அதோடு அந்த ஆண் ஆசைகாட்டித் தன்னை மோசம் செய்து விடுவானோ என்ற பயமும் சேர்ந்து கொள்வதால் தான் ஒரு ஆணே தன்னை விரும்பி வந்தாலும் அவனைப் புறக்கணித்து விடுகிறாள் பெண் என்பது அவர் கருத்து.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124858542807720762005-08-23T21:41:00.000-07:002008-08-28T13:08:29.996-07:00காமசூத்திரம் விவரிக்கும் 4 வகைப் பெண்குறிகள்கலவியில் ஈடுபடுவதற்கு முன் ஆண், பெண்ணைப் பல வழிகளில் உறவுக்குத் தயார் செய்ய வேண்டும். அப்படித் தூண்டினால், அவளது குறியில் பசை போல ஒரு விதத் திரவம் சுரக்கும். இதை விரல்களால் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதை ஆண் தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும். <br />பெண்குறி நான்கு வகைப்படும் எனக்கூறுகிறது காமசூத்திரம்... <br /><br />அவை.... <br /><br />தாமரை இதழ் போல மென்மையானது <br /><br />முண்டும் முடிச்சுமாக ஒழுங்கற்று இருப்பது <br /><br />தளர்ச்சியடைந்து பல மடிப்புகளாக இருப்பது <br /><br />பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பாக இருப்பது....<br /><br />இதைத் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம். <br /><br />இப்போது இவை பற்றி சற்று விரிவாகக் காணலாம்.... <br /><br />தாமரை இலை போல மென்மையான குறியைக் கொண்டவர்களை, நிறைய நேரம் செக்சுக்குத் தூண்டத் தேவையில்லை. இவர்கள் தன்னாலேயே ஆர்வமாகி, உணர்ச்சிப்பிளம்பாகி வெகு சீக்கிரத்திலேயே உச்சக்கட்டத்தை அடைந்து விடுவார்கள் இந்த வகைப் பெண்கள். ஆனால் மற்ற மூன்று வகைப் பெண்களும், குறியில் கைகளால் வருடியும், ஆண்குறியால் வருடியும் கொடுத்து உராய்வை ஏற்படுத்தினால் தான் உச்சக்கட்டத்தை அடைவார்கள். <br /><br />சில ஆண்கள், எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற பாணியில் கலவியை கண் மூடி விழிப்பதற்குள் முடித்துக் கொண்டு, பெண்ணின் உணர்ச்சியைப் பற்றிப் பரிது படுத்தாமல் இருந்து கொள்வார்கள். இந்தச் செய்கை பெண்ணுக்கு மிகுந்த வெறுப்புணர்ச்சியை உண்டாக்கக்கூடும். எனவே, கலவியில் ஈடுபடும் போது பெண்ணின் செய்கைகளையும், பார்வையையும் நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டு, அவளது உணர்ச்சியையும் தணிப்பது தான் கலவியை முழுமையடையச் செய்யும் புத்திசாலித்தனமாகும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124858162158778612005-08-23T21:33:00.000-07:002005-08-23T21:36:02.160-07:00பல வகையான மாறுபட்ட கலவி நிலைகள்....*செக்சில், ஆண் கீழும், பெண் மேலுமாக ஈடுபடும் மாறுபட்ட கலவி நிலைகளில் ஈடுபடுவதால் சில பெண்களுக்கு கூச்சமின்றி ஈடுபடத் தோன்றலாம். இப்படி மாறுபட்ட நிலைகளில் ஈடுபடக்கூடாத சில சூழ்நிலைகளும் உண்டு. அவை என்னென்னவென்று தெரியுமா? <br /><br />மாதவிடாய் வெளிப்படும் காலம் <br /><br />சமீபத்தில் குழந்தை பெற்றவள் <br /><br />பிறப்புறுப்பு மிக இறுக்கமாக அமைந்த பெண் <br /><br />பருத்த உடல் கொண்டவள் <br /><br />கலவியில் ஈடுபடும் ஆணும், பெண்ணும் புதுப்புது விதங்களில் இன்பம் அனுபவிக்க விழைவார்கள். அத்தகைய அத்தகைய நிலைகளை சித்ரரத அசாதாரணமான நிலைகள் என்பார்கள். ஆனால் தீவிர காம இச்சை கொண்ட ஆணும், பெண்ணும் பயிற்சிக்கு பிறகே இது போன்றவற்றில் ஈடுபட வேண்டும். <br /><br />இந்த நிலைகள் பல வகைப்படும்... அவை.... <br /><br /><strong>ஸ்திர ரத (நின்ற நிலை) </strong>பெண், சுவர் மீதோ, தூண் மீதோ சாய்ந்த படி நின்றிருக்க ஆண் அவளை நின்ற நிலையிலேயே இறுகத் தழுவி அணைத்துக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை <br /><br />நின்ற கலவி நிலை மேலும் 3 வகைப்படும்... <br /><br /><strong>முன் நீட்டிய நிலை... </strong><br /> நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆண் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை <br /><br /><strong>இரண்டு அடுக்கு நிலை... </strong><br /> நின்றிருக்கும் பெண்ணின் கால்கள் துவளும் படி பிடித்துக்கொண்டு கலவியில் ஈடுபடுவது இரண்டு அடுக்கு நிலை <br /><br /><strong>முழங்கால், முழங்கை நிலை....</strong> <br /> ஆண் நின்ற நிலையில் பெண்ணைத் தூக்கி அவன் தன் இடுப்பில் இரண்டு கால்களையும் இடுப்பைக் பின்னிக்கொள்ளும் வகையில் போட்டுக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை <br /><br /><strong>தொங்குநிலை.... </strong><br /> ஆண், சுவர் அல்லது தூணில் சாய்ந்து நிற்க, பெண் அவன் மீது ஏறி, கால்களைப் பின்னிக் கொண்டு கலவியில் ஈடுபடுவது இந்த நிலை. இதில் ஆண், பெண்ணின் கழுத்தைக் கட்டிக் கொள்வான். <br /><br /><strong>மிருகங்களின் நிலை..... </strong><br /> இந்த நிலையில், பெண் படுக்கையில் முழங்கால் போட்டு மண்டியிட்டுக் கொள்ள ஆண், பின்புறமாகப் புணர்ச்சியில் ஈடுபடுவான். <br /><br /><strong><br />நீர் விளையாட்டுக் கலவி.... </strong><br /> ஆணும், பெண்ணும் ஏதாவது நீர் நிலைகளில் கலவியில் ஈடுபடுவது இந்த முறை.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124857891946781792005-08-23T21:15:00.000-07:002005-08-23T21:31:31.953-07:00பெரும்பாலோர் உறவின் போது பேசுவதே இல்லை....*பிறர் உங்களைக் கவர வேண்டும் - பிறர் உங்களது வேட்கையை எழுப்பவேண்டும், பிறர் உங்களுக்குப் புணர்ச்சி இன்பம் வழங்க வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கலாகாது. நமது பாலுணர்வுக்கு நாமே பொறுப்பு ஆண்கள் இதை ஒப்புக்கொள்கின்றனர். <br />ஆனால் பெண்கள் இதில் நேர் எதிர், ஆண்கள் பாலுறவில் தம்மைவிடக் கெட்டிக்காரர்கள் - ஆகவே அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே சரி என்று கருதுவது பெண்கள் குணம் கணவர்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருப்பார்கள். <br /><br />இதுவே பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது உங்கள் பங்கை நீங்கள் ஆற்றுவதன் மூலமே உங்கள் துணைக்கு மகிழ்ச்சி தருகிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் போதும் <br /> <br /><br />பெரும்பாலோர் உறவின் போது பேசுவதே இல்லை. பேசினால் உறவு பாழாகி விடும் என்று கருதுகின்றனர். தன்னிச்சையான உறவுக்குப் பேச்சு எதிரி என்று நினைக்கின்றனர். <br /><br />இன்னொருவருக்கு என்ன தேவை என்பதைப் பேசினால்தானே தௌவாகத் தெரிந்து கொள்ள முடியும்? சில வருடல்கள் சில சமயங்களில் மிக அதிகம் - உச்ச நிலையை மிக எளிதில் தருவித்து விடும் என ஒருவர் உணரலாம். <br /><br />அதைச் சொல்லித் தொலைத்தால் தானே அதற்கு ஏற்றபடி இன்னொருவர் நடந்து கொள்ள இயலும்? சரியான சமயத்தில் சிறிய முணுமுணுப்பு கூட பாலுறவை மிக உன்னத கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை மறக்கலாகாது....சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124856836704359302005-08-23T21:12:00.000-07:002005-08-23T21:13:56.706-07:00ஆண் குறி விரைப்படையாமல் போக காரணங்கள் என்ன?உடலுறவின் போது சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்படையாமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மன ரிதியான, உடல் ரிதியான அல்லது சுழ்நிலைக் காரணங்கள் என அவை பல வகைப்படும். <br />சிலருக்கு ஒரு சிறு சத்தம் கூடக் கேட்காத சுழ்நிலையாக இருந்தால் தான் உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியும். சிலருக்கு வெளிச்சமான சுழ்நிலை சரி வராது. இன்னும் சிலருக்கு வெளிச்சமான சுழலில் பெண்ணின் உறுப்பைப் பார்த்தால் தான் உடலுறவு கொள்வதற்கான மூடே வரும். இன்னும் சிலருக்கு போதையில் இருந்தால் தான் உடலுறவே கொள்ள முடியும். அந்த அளவிற்கு அப்படிப் பழக்கி இருப்பார்கள். <br /><br />உடல் ரிதியாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயால் பாதித்திருந்தாலும் கூட ஆண் குறி விரைப்படையாமல் போகலாம். தண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப்பு, நரம்பு மண்டல நோய், ஆண்குறியில் தொற்று நோய்கள், காயம், அல்லது சிறுநீர்ப்பாதை நோய்கள், ப்ராஸ்டேட் சுரப்பியில் கோளாறு,. நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், போதை மருந்துகளும் ஆண் குறி விரைப்படையாமல் போக காரணமாக இருக்கின்றன.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124856570442730242005-08-23T21:07:00.000-07:002005-08-23T21:09:30.443-07:00கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.<br /> பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும். <br /><br />கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது. <br /><br />கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124855163822389472005-08-23T20:44:00.000-07:002005-08-23T20:46:03.823-07:00பெண்ணுக்கு, எது மாதிரியான உச்சக்கட்டம் சிறந்தது...?உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட இன்பம் என்பது ஒன்று தான். ஆனால் அது உடல் கூறின் அடிப்படையில் ஒரே விதமாகத்தான் உண்டாகின்றன. இதில் உறுப்புக்களின் பங்கேற்பு மட்டுமே முக்கியமல்ல. சுய இன்பத்தின் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது கூட இயற்கையான இன்பம் தான். நபருக்கு நபர் உச்சக்கட்டத்தின் தீவிர நிலை வேறு படலாமே தவிர, உச்ச நிலையில் மாற்றமில்லை என்பது தான் உண்மை. <br /><br />பெண்களைப் பொறுத்த வரை உச்சக்கட்டம் அடையப் பல வழிகள் உண்டு. ஏதாவது பொருட்கள் மூலமோ, விரல்கள் மூலமோ கிளிடோரிசைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம். ஒரு ஆணின் துணையோடு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலமும் உச்சக்கட்ட இன்பத்தை எட்ட முடியும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், கிளிடோரிஸ் தூண்டப்பட்டு பெறும் இன்பமே முழு திருப்தியை அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. <br /><br />அதே சமயம் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும் அதிலும் கிளிடோரிஸ் தூண்டப்பட்டுத்தான் ஒரு பெண் செக்சில் முழு மன திருப்தியை அடைய முடிகிறது எனவும் அந்த ஆய்வு கூறுகிறதுசிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124855029274482262005-08-23T20:43:00.000-07:002005-08-23T20:43:49.276-07:00பெண்ணுக்கு உடலுறவு வேட்கைக் காலம்இன்னமும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்மைக அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன. <br /> இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில் ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது. <br /><br />அந்தக் கால கட்டம் எது? <br /> பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும். <br /><br /> ஆம் உயிரின உற்பத்திக்காக உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்கி, இன உற்பத்தியில் அவளைச் சிக்க வைக்கச் செய்த சதிதானோ இது*சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124854976961262362005-08-23T20:40:00.000-07:002005-08-23T20:42:56.963-07:00உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்<strong>உடலுறவு வேட்கை- </strong><br /><br /> உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன. <br /> ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றது. <br /><br /><strong>ஆண் குறி விறைத்தல்- </strong><br /><br /> ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது. <br /> ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது. <br /> இதற்கு அடுத்தபடியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நௌpந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறியைச் சுற்றிக் கிடக்கின்றது. <br /><br /> ஆன் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது. <br /><br /> ஆண் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது. <br /><br /> உடலுறவு நேரத்தில், இந்தப் போர்வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறைகளில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்ககெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது. <br /><br /> இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன்மடங்காக, ஆண்குறியில் பெருகுவதற்கு, அதில் உள்ள உணர்ச்சிகளைக் கிளறும் நம்புகள் காரணமாக உள்ளன. <br /><br /> இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை காரணமாகவும் செயல்படலாம். <br /><br /> ஆகவேதான், வாலிபப் பருவத்தில் உள்ள ஓர் இளைஞன், எழில் பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது. <br /><br /> ஒழுக்க சீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்த நிலை ஏற்படலாம். <br /><br /> இஃது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124854795748563662005-08-23T20:37:00.000-07:002005-08-23T20:39:55.750-07:00புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு...!திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு <br /> இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும். <br /><br /> இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன?சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124854604095454552005-08-23T20:34:00.000-07:002005-08-23T20:36:44.096-07:00உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன உணர்கிறார்கள்...?செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது... எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர். <br /><br />ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர். <br /><br />பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124854409852588602005-08-23T20:31:00.000-07:002005-08-23T20:33:29.853-07:00உச்சக்கட்டம் எதைப்பொறுத்தது...?இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது. இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை. <br /><br />இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன. உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது. <br /><br />உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124854206373347522005-08-23T20:28:00.000-07:002005-08-23T20:30:06.373-07:00உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்...?விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள். <br /><br />உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர். <br /><br />இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124853751980781062005-08-23T20:20:00.000-07:002005-08-23T20:22:31.980-07:00பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும். <br /><br />இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும். <br /><br />உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன. <br /><br />குழந்தை பெறத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124853567832685422005-08-23T20:17:00.000-07:002005-08-23T20:19:27.833-07:00ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை...*கிளர்ச்சி நிலையில் தொடர்ந்து பாணர்வு இறுக்கம் நீடிக்க நீடிக்க அடுத்த கட்டமான இன்ப எழுச்சி நிலைக்கு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் உச்சக்கட்டம் வருகிறது. இன்ப எழுச்சி நிலை ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலர் எழுச்சி நிலையில் நீடிக்க இயலாமல் உடனடியாக உச்ச நிலையை அடைந்து விடுவார்கள். சிலருக்கு உச்ச நிலை வரத் தாமதமாகும். <br /><br />பெண்ணின் இன்ப எழுச்சி நிலையில் ரத்த நாளங்களில் அதிக ரத்த ஓட்டம் காரணமாக இறுக்கம் அதிகாpத்து திசுக்கள் புடைத்தெழுகின்றன. இந்தப் புடைப்பு நிலை ஆர்காஸ்மிக் ப்ளாட்பாம்- எனப்படுகிறது. இந்த நேரத்தில் பெண்குறியின் உட்சுவர் 30 சதவிகிதம் குறுகி ஆண் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த நேரத்தில் கருப்பையும் முன்னுக்கு வரும்.சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12303523.post-1124853324285788962005-08-23T20:14:00.000-07:002005-08-23T20:15:24.286-07:00செக்ஸ் கிளர்ச்சி எப்போது தோன்றும்..?எதிர்பாராதவிதத்திலும், நேரத்திலும், செயல்களிலும் கூட செக்ஸ் உணர்வு தோன்றலாம். டைம்பாம் போல எப்போது மனதின் ஆழத்தில் செக்ஸ் உணர்வலைகள் வெடித்துப் பரவும் என்று சொல்ல முடியாது. <br /><br />அவரவர் ரசனைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் அந்த விஷயத்தில் கிளர்ச்சி உண்டாகலாம். ஒரு சிலருக்கு நேரடியாக உடலைத் தொட்டால் தான் கிளர்ச்சி, இன்னும் சிலருக்கு முத்தமிட்டால் தோன்றும், சில பேருக்கு வார்த்தைகளே விரச உணர்வைத் தூண்டும், <br /><br />இன்னும் சிலருக்கு நிர்வாண நிலையைப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதிலும் சில பேருக்கு ஆடை அலங்காரத்தைப் பார்த்ததுமே பரவசம் கொள்வார்கள். வயது வித்தியாசமின்றி எந்த வயதினருக்கும் கிளர்ச்சி உண்டாகலாம். <br /><br />இன்னும் சிலருக்கு தூங்கும் போது கனவுகள் வந்து அதன் மூலம் கிளர்ச்சி உண்டாகும். விழித்துக்கொண்டிருக்கும் போதே பகல் கனவில் மூழ்குபவர்களையும் நாம் பார்த்திருக்கிறேhம். <br /><br />தூக்கத்தில் பொதுவாக ஆண்களுக்கு ஒரு இரவில் குறைந்தது ஆறு முறையாவது குறி விரைக்குமாம். அதே போல பெண்களுக்கு குறியின் உள்ளே இன்ப நீர் சுரந்து கிளர்ச்சி உண்டாகுமாம்...*சிவகுமார் சுப்புராமன்http://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.com